சரக்கு ரயிலின் கண்டெய்னர் மீது நின்ற படி பயணித்த நபர்-மின் இணைப்பை துண்டித்து காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், சரக்கு ரயில் கண்டெய்னர் மீது நின்றபடி ஆபத்தான முறையில் பயணித்த நபரை, மின் இணைப்பைத் துண்டித்து பயணிகளின் உதவியுடன் ரயில் நிலைய அதிகாரி மீட்டார்.

காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கிச் சென்ற சரக்கு ரயில், வாணியம்பாடி ரயில் நிலையம் வந்த போது அதன் மீது ஒருவர் நின்றபடி பயணித்ததைக் கண்டு பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து ரயிலை 3வது நடைமேடையில் நிறுத்தி மின் இணைப்பை துண்டித்த ரயில் நிலைய அதிகாரி, பயணிகள் உதவியுடன் அந்த நபரை கீழே இறங்கச் செய்து அனுப்பி வைத்தனர்.

அந்த நபர் எந்த இடத்தில் ரயிலின் மேற்கூரை மீது ஏறினார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.