சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கு: சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது உறுதியானால் உரிமம் ரத்து – மருத்துவ இயக்குனர்.!

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், குழந்தைகள் நல காப்பகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ இயக்குனர் விஸ்வநாதன், இந்த வழக்கில் மேலும் சில மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக கூறினார்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.