நான் நடித்த படங்களை பார்க்க மாட்டேன்! – கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி தகவல்

தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி படத்திற்காக தேசிய விருது பெற்றவருக்கு அதன்பிறகு தமிழ், தெலுங்கில் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த படங்களும் ஹிட் படங்களாக அமையவில்லை. இதனால் வித்தியாசமான கதை தேடலில் ஈடுபட்டு இருப்பதாக கூறும் கீர்த்தி சுரேஷ், தான் அளித்த ஒரு பேட்டியில், தேசிய விருது பெற்று விட்டபோதும் என்னுடைய நடிப்பு இன்னமும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. நான் நடித்த படங்களை பார்க்கும்போது அதில் நிறைய குறைகள் இருப்பதாக அறிகிறேன்.

அதன் காரணமாகவே பெரும்பாலும் நான் நடித்த படங்களில் நான் பார்ப்பதில்லை. காரணம் நான் செய்த தவறுகள் மீண்டும் மீண்டும் என் கண்முன்னே வந்து செல்லும். இதை விட இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாமே என்று மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே இருப்பேன் என்று கூறியுள்ள கீர்த்தி சுரேஷ், நடிப்பின் மீது எனக்கு தீராத காதல் உள்ளது. அதனால் இன்னும் நிறைய மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியுள்ளது என்று கூறி இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.