ஸ்ரீசைலத்தில் கர்நாடகா அரசு பஸ்ஓட்டுனர், நடத்துனர் மீது தாக்குதல்| Dinamalar

விஜயபுரா : ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் பஸ் நிலையத்தில், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் உறங்கிக் கொண்டிருந்த ஓட்டுனர், நடத்துனரை மர்ம நபர்கள் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.கன்னட வருட பிறப்பை ஒட்டி, ஏப்ரல் மாதம் ஸ்ரீசைலத்துக்கு, கர்நாடகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சென்றிருந்தனர். அப்போது அங்கு தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கன்னடர்கள் தாக்கப்பட்டனர்.

தற்போது, ஜூன் 2ல் விஜயபுராவிலிருந்து ஸ்ரீசைலத்துக்கு கர்நாடக சாலை போக்குவரத்து பஸ் சென்றது. அன்றைய தினம் பஸ் ஓட்டுனர் பசவராஜ் பிராதர், நடத்துனர் ஆகியோர் ஸ்ரீசைலத்தில் பஸ்சிலேயே உறங்கினர்.நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் பஸ்சுக்குள் புகுந்து இருவரையும் தாக்கினர். இவர்களில் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் அங்கு வந்தனர். இதை பார்த்த மர்ம நபர்கள், தப்பியோடினர்.பின், காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில், ஓட்டுனர் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.