30 செங்கல் திருட்டு போனது விதான் சவுதாவில் புகார்| Dinamalar

பெங்களூரு : தான் வாங்கி வைத்த 30 செங்கல்லை பக்கத்து வீட்டை சேர்ந்தவர் திருடி விட்டார் என கோழிக்கடை உரிமையாளர், விதான் சவுதா வந்து உள்துறை அமைச்சரிடம் புகார் அளித்தார்.பெங்களூரு ஊரகம் தொட்டபெலேபங்களாவை சேர்ந்தவர் வெங்கடேஷ் கவுடா, 40. கோழி இறைச்சி கடை வைத்துள்ளார்.

இவர் தன் வீட்டில் 30 செங்கல்லை வாங்கி வைத்திருந்தார்.இதை பக்கத்து வீட்டை சேர்ந்தவர் திருடி விட்டார் என கடந்த மார்ச் 1ல் தொட்டபெலேபங்களா போலீசில் புகார் அளித்திருந்தார்.ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவுக்கு ‘ஸ்பீடு போஸ்டில்’ புகார் அளித்திருந்தார்.அவரிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை. இதனால் அவர் நேற்று நேரடியாக விதான் சவுதா வந்து உள்துறை அமைச்சரை சந்தித்து புகார் அளித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.