இன்றும் நாளையும் மாமல்லபுரத்தில் காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாடு நடைபெறுகிறது

சென்னை

ன்றும் நாளையும் மாமல்லபுரத்தில் காங்கிரஸ் சார்பில் சிந்தனை அமர்வு மாநாடு நடைபெறுகிறது..

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர், “மேகேதாது அணை கட்டுமானத்தை கர்நாடக அரசு கை விட வேண்டும் இல்லை என்றால் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இன்றும் நாளையும் தமிழக காஙிரஸ் சார்பில் மாமல்லபுரத்தில் சிந்தனை அமர்வு மாநாடு நடைபெறுகிறது.  இந்த மாநாட்டில் நாளொன்றுக்கு 300 பேர் என 3 குழுக்களாகக் கலந்து கொள்ள உள்ளனர்.  மாநாட்டில் கொளிகை வளர்ப்பு, நாட்டில் தற்போதைய பிரச்சினை, ஆகியவை குறித்து நேர்மறையாக எடுத்துரைக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

கே எஸ் அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்த போது முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், செயல் தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண், உ.பலராமன், மாவட்ட தலைவர்கள் எம்.பி. ரஞ்சன் குமார், சிவ ராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், நாஞ்சில் பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.