ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகனுக்கு பரோல் கோரி மனைவி நளினி தாக்கல் செய்த மனு வாபஸ்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகனுக்கு பரோல் கோரி மனைவி நளினி தாக்கல் செய்த மனு வாபஸ் பெற்றார். மனு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளதால் முருகனுக்கு பரோல் கோரிய விண்ணப்பத்தை சிறை நிர்வாகம் நிராகரித்துவிட்டதாக சிறைத்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது. பரோல் விண்ணப்பம் நிராகரிப்பை எதிர்த்து சிறைத்துறை டி.ஐ.ஜி. முன் மேல்முறையீடு செய்யலாம் என சிறைத்துறை தரப்பு விளக்கமளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.