Imran Khan: இம்ரான் கான் கைது செய்யப்படுவார் – உள்துறை அமைச்சர் தகவல்!

பாதுகாப்பு ஜாமின் முடிந்ததும் இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்து உள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானில், ஆளும் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்த போராட்டங்களின் போது வன்முறையை தூண்டியதாக அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில் ஜாமின் கோரி பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி குவாசிர் ரஷித், 3 வார காலங்கள் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளார். வரும் 25 ஆம் தேதி வரை இம்ரான் கானை கைது செய்யக் கூடாது என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

Nigeria Church Shooting: சர்ச்சில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு – 50 பேர் உயிரிழப்பு!

இதையடுத்து பெஷாவரில் இருந்து இஸ்லாமாபாத் திரும்ப இம்ரான் கான் முடிவு செய்துள்ள நிலையில், இடைக்கால ஜாமின் காலம் முடிந்ததும், இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்து உள்ளார்.

இம்ரான் கானை இஸ்லாமாபாத்திற்கு வரவேற்கிறோம் என்று கூறியுள்ள அமைச்சர் ராணா, அவருக்கு சட்டப்படி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என தெரிவித்து உள்ளார். இதற்கிடையே உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லாவின் பானி காலா இல்லத்திற்கு வெளியே கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.