உஸ்பகிஸ்தானில் ஆரம்பமான ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீரர்கள் குழாம் 11ஆம் திகதி தாய்லாந்து அணியையும் , 14ஆம் திகதி மாலைதீவு அணியையும் எதிர்கொள்ளவுள்ளனர். போட்டிகள் அனைத்தும் உஸ்பகிஸ்தானின் மர்கஸிய் விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளன.
இந்த தொடருக்கான இலங்கை அணியை தயார்படுத்தும் வகையில், கடந்த மே 24ஆம் திகதி இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் உத்தேச அணி அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் உள்நாட்டிலும் கட்டார் நாட்டிலும் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், 23 பேர் அடங்கிய இறுதி அணியின் வீரர்கள் பட்டியல் ,இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.