குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின் மரணித்த இளம்பெண்.. நீதிமன்ற உத்தரவு படி பிரேதபரிசோதனை..!

சென்னை, வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர்  வினோதினி. இவருக்கு சின்னபோரூர் மருத்துவமனையில் குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பின் உடல்நிலை மோசமானதை அடுத்து மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால், அங்கு சிகிச்ச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

தவறான அறுவைசிகிச்சைதான் அவர் உயிரிழந்ததிற்கு காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.இதனை அடுத்து, இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி அந்த பெண்ணின் உடலை பிரேதபரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

தவறான குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சையால் பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளாய் ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.