கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி

லாஸ் ஏஞ்சல்ஸ்,

போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

2009ல் அமெரிக்காவை சேர்ந்த கேத்ரின் மேயோர்கா லாஸ்வேகாஸ் ஓட்டலில் வைத்து ரொனால்டோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடுத்து இருந்தார். ஆனால் இதனை ரொனால்டோ மறுத்து வந்தார். இந்த வழக்கு லாஸ் வேகாஸ் நகர கோர்ட்டில் நடைபெற்று வந்தது

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்,


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.