கோடை வெயில் உஷ்ணத்தை தாங்க முடியாமல் பஞ்சாபின் ஜிராக்பூரில் உள்ள மிருக காட்சி சாலையில் உள்ள விலங்குகள் திண்டாடி வருகின்றன.
பஞ்சாபில் கடந்த இரண்டு வாரங்களாக 40 டிகிரி செல்சியசுக்கு மேல் கோடை வெப்பம் தகித்து வருகிறது.
வெப்பத்தின் உஷ்ணத்தில் இருந்து சிங்கம், புலி, யானை, மான் வகைகள் மற்றும் பறவை இனங்களை காக்க நீரோடை, நீர் காற்றாடி மற்றும் தண்ணீர் தெளிப்பான்களை பூங்கா நிர்வாகத்தினர் பொருத்தி உள்ளனர்.