திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம்!

கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. குறிப்பாக வார இறுதியில் அதிக கூட்டம் வருவதால் அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற 15ஆம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் நடைபெறும் விசேஷ பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், கூடுதலாக சாமானிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதாக திருமலை தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பதியில் தினமும் ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் 25,000 பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை இதர சேவைகள் மூலம் 70,000க்கும் மேற்பட்ட பக்தர்களும் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆனாலும், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பக்தர்களை தங்கவைக்கும் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் உள்ளிட்டவைகள் நிரம்பி வழிவதால், பகதர்கள் சுமார் 30 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்றவகையில், திருப்பதி செல்லும் பக்தர்கள் தங்களது பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.