வன்முறைக்கு மூளையாகச் செயல்பட்ட ஜாவேத் அகமது வீட்டை இடித்த அதிகாரிகள் : சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதால் நடவடிக்கை

த்தரப் பிரதேசத்தின் பிரயாக் ராஜ் நகரில் வெள்ளியன்று நிகழ்ந்த வன்முறைக்கு மூளையாகச் செயல்பட்ட ஜாவேத் அகமது என்பவனின் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்து நொறுக்கினர்.

வன்முறையில் தொடர்புடையோரின் சட்டவிரோதக் கட்டடங்கள் குறித்து அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜாவேத் அகமது வீடும் சட்டவிரோதமாக அனுமதியின்றிக் கட்டியது என அடையாளம் காணப்பட்டதால் அந்த வீட்டில் உள்ளவர்கள் 11 மணிக்குள் வெளியேற வேண்டும் எனக் காலக்கெடு விதித்து நோட்டீஸ் ஒட்டினர்.

இதையடுத்து ஆயுதமேந்திய காவல் படையினரின் பாதுகாப்புடன் அந்த வீட்டில் போராட்டத்துக்காக வைத்திருந்த போஸ்டர்கள், கொடிகளைக் கைப்பற்றி வெளியே எடுத்து வந்தனர். அதன்பின் புல்டோசர் உதவியுடன் வீட்டை இடித்து நொறுக்கினர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.