வைகாசி விசாகத் திருவிழா… அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு வழிபாடு..!

வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டு வருகின்றனர்.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெறும் திருவிழாவில் அதிகாலை 3 மணி முதல் இடைவிடாமல் பாலாபிஷேகம் செய்தும் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி எடுத்தும் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முருகனின் அவதார தினமான நாளாக கருதப்படும் இன்றைய தினம் வழிபட்டால் ஆண்டு முழுவதும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாக கருதப்படுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.