அடகுக் கடை கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்.. கடையின் மேலாளரே நகைகளை திட்டமிட்டு கொள்ளை அடித்தது அம்பலம்..!

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே அடகு கடை கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பமாக அக்கடையின் மேலாளரே நகைகளை திருடியது அம்பலமானதை அடுத்து கைது செய்யப்பட்டார்.

இரும்புதலை கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் நடத்தி வரும் அடகு கடையில் கடந்த 11ம் தேதி  மேலாளர் ராஜேந்திரன் இருந்த போது அங்கு வந்த 2 பேர் அவரை அடித்து வாயில் துணியை வைத்து அமுக்கி பீரோவில் இருந்த நகைகளை அள்ளி சென்றதாக கூறப்பட்டது.

அங்கு  பதிவான கைரேகைகளை ஆய்வு செய்தபோது வெளி நபர்களின் கைரேகைகள் அங்கு இல்லை என கூறப்படுகிறது.

ராஜேந்திரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வேறு வழியின்றி தானே நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

அவரிடமிருந்து 38 சவரன் நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.