ஈரோட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிய 2 பேர் கைது.. மூலப் பொருட்கள் பறிமுதல்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி, விண்ணப்பள்ளியில் போலீசார் நேற்று வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாக்குப்பையுடன் அவ்வழியாக வந்த ஒருவர் போலீசாரை கண்டவுடன் ஓட்டம் பிடித்தார்.

இதையடுத்து அவரை துரத்தி பிடித்த போலீசார் அவரிடமிருந்த சாக்குப்பையை சோதனையிட்டதில் 20 நாட்டு வெடி குண்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து 2பேரை கைது செய்த போலீசார், 300 கிராம் வெடிமருந்து, அலுமினிய பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.