காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு – காங்கிரஸ் தகவல்

டெல்லியில் காங்கிரஸ் கட்சிப் பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜரான நிலையில், அக்கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற பேரணியின்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்த அவர், தான் நலமாக உள்ளதாகவும், லேசான அளவில் ஏற்பட்ட முறிவில் இருந்து 10 நாட்களில் குணமடைந்து விடுவேன் என்றும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.