படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு 12 நாட்களாக அமெரிக்காவில் உள்ள சிம்பு.. அவரை பெற்றதில் தான் பெருமையடைவதாக டி.ராஜேந்திர் கண்ணீர் மல்க பேட்டி..

தனது சிகிச்சை தொடர்பாக மகன் சிம்பு, படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கியிருப்பதாகவும், அவரை பெற்றதில் தான் பெருமையடைவதாகவும் இயக்குனர் டி.ராஜேந்திர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், தான் மேல் சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல மகன் சிம்பு தான் காரணம் என்றும் தன்னைப் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறினார்.

வயிற்றுப் பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற டி.ராஜேந்தர் 2 வார காலம் அமெரிக்காவில் உயர் சிகிச்சைப்பெற உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.