உர ஏற்றுமதி முறைகேடு தொடர்பாக ராஜஸ்தான் முதலமைச்சரின் சகோதரர் வீட்டில் சிபிஐ சோதனை.!

உர ஏற்றுமதி முறைகேடு தொடர்பாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் சகோதரர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கெலாட் சகோதரரின் நிறுவனம் 2007 முதல் 2009 வரையான காலத்தில் மானிய விலையில் பெற்ற பொட்டாஷ் உரத்தைச் சேகரித்துத் தொழில் பயன்பாட்டுக்கான உப்பு என்ற பெயரில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் குற்றஞ்சாட்டியுள்ளன.

இது தொடர்பாக ஜோத்பூரில் உள்ள அக்கிராசன் கெலாட்டின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.