சாராய வியாபாரிகளிடம் வசூல் வேட்டை நடத்திய போலீசார்.. கூண்டோடு இடமாற்றம் செய்த டிஐஜி..!

நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய 14 காவலர்கள் ஒரே சமயத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினத்தில் மதுவிலக்கு போலீசார் சாராய வியாபாரிகளிடம் வசூல் வேட்டை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 75 ஆயிரம் ரூபாய் சிக்கியது.

பொறுப்பு ஆய்வாளர் ஆரோக்கிய டூனிக்ஸ்மேரி, உதவி ஆய்வாளர் சேகர், தலைமை காவலர் தேவராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்த தஞ்சை சரக டிஐஜி கயல்விழி அங்கு பணியாற்றிய 14 காவலர்களையும் இட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.