ஜனாதிபதி தேர்தலுக்காக சிறப்பு பேனா தயார்| Dinamalar

புதுடில்லி : ‘ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் சிறப்பு பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு ஊதா நிற மையைப் பயன்படுத்த வேண்டும்’ என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், அடுத்த மாதம், 18ல் நடக்க உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக ராஜ்யசபா செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாநிலங்களில் தேர்தலை நடத்தும் உதவி அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்போரின் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, சிறப்பு பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில், ஊதா நிற மையைப் பயன்படுத்த வேண்டும். இதற்கான பேனா மற்றும் மை அனுப்பி வைக்கப்படும். மற்ற பேனா மற்றும் மையைப் பயன்படுத்தினால், அந்த ஓட்டுச் சீட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.