திருடு போய் 37 ஆண்டுகளுக்கு பின் மீண்டு வந்த சாமி சிலைகள்.. ஆரத்தி எடுத்தும் அபிஷேகம் செய்தும் பக்தர்கள் கொண்டாட்டம்..!

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ ஆவுடையம்மாள் கோவிலில் காணாமல் போய் 37 ஆண்டுகளுக்கு பின் திரும்பி வந்த சாமி சிலைகளுக்கு ஆரத்தி எடுத்து பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்காளநாதர் மற்றும் அதிகார நந்தி சிலைகள் கடந்த 1985 ஆம் ஆண்டு காணாமல் போயின.

அமெரிக்காவில் தனியார் அருங்காட்சியகத்தில் இருந்த சிலைகள் நெடிய போராட்டத்திற்கு பின் மீண்டும் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.