அண்மையில் பாஜகவில் இணைந்த திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது..!

பணம் கேட்டு மிரட்டிய புகாரில், திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 11ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் சூர்யாவின் கார் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, தனது காரில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த பேருந்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்றை சூர்யா எடுத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக புகாரளிக்கப்பட்டது.

பேருந்தின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சூர்யாவை திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையினர் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.