இளவாலை பனைசார் உற்பத்தியாளர்களுக்கு தொழிற்கருவிகள், துவிச்சக்கர வண்டிகள்

2022 வரவு செலவு வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமத்துக்கான 3 மில்லியன் ரூபாய் நிதியில் ஒரு கட்டமாக, இளவாலை சௌபாக்கியா உற்பத்தி கிராமத்தில் தொழில்புரியும் பனைசார் உற்பத்தியாளர்களுக்கான தொழிற்கருவிகளும், துவிச்சக்கர வண்டிகளும் இன்று (24) வழங்கப்பட்டன.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளர் திரு சதாசிவம் இராமநாதனினால் இவை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.