தரையிறங்கும் போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளான ராணுவ சரக்கு விமானம்.. 4 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் ரியாசான் நகருக்கு அருகே இராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும் போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

Ilyushin Il-76 என்ற சரக்கு விமானத்தில் மொத்தமாக 9 பேர் பயணித்துள்ளனர். ரியாசான் பகுதியில் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக விமானம் தீப்பற்றியதில் அதில் சிக்கி 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானத்தின் என்ஜின் கோளாறால் இந்த விபத்து நேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.