மாணவர் விசாவுக்கான விண்ணப்பங்கள்: தாமதிக்காது அனுப்பி வையுங்கள்

இங்கிலாந்தில் உயர் கல்வியைத் தொடர மாணவர் விசாவுக்கு (student visa) விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இந்த விசா நடைமுறைக்கு சுமார் 5 வாரங்கள் ஆகும் என்பதனால் மிக விரைவாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் எமக்கு கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். எனவே, அனைவரும் தாமதிக்காது தமது விண்ணப்பங்களை அனுப்பி வையுங்கள்” என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.