முதல் ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி

சுற்றுலா  இந்திய மகளிர்  மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட்அணிகளுக்கிடையிலான  மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இந்திய மகளிர்  அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் மூன்று T 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் T20 ஓவர் போட்டி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (23) நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

இலங்கை பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 104 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ரி 20 போட்டி நாளை (25) நடைபெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.