இன்று எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு


இன்றையதினம் எரிபொருள் பெற்றுக் கொள்ள கூடிய இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

லங்கா ஐஓசி நிறுவனம் நேற்று (25) திருகோணமலை முனையத்தித்தில் இருந்து 78 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை அனுப்பியுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விலை அதிகரிப்பு

இன்று எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்த நிலையில், நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதிய விலை விபரம்
92 ஒக்டேன் பெட்ரோல் 50/- ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 470/- ரூபாவாகும்.

95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும்.

இதேவேளை ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளின் விலைகளுக்கு இணையாக உயர்த்தியுள்ளது.

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.