காலில் கட்டு போடும்போது வலியை மறந்து தேசிய கீதம் பாடிய உக்ரைனிய சிறுமி! மனதை உருக்கும் வீடியோ


உக்ரைனைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காலில் கட்டு போட்டுக்கொண்டு தனது தேசிய கீதத்தைப் பாடுவதைக் காட்டும் இதயத்தை உருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

இந்த பதிவை உக்ரைனின் உள்நாட்டு விவகார அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ (Anton Gerashchenko) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், “உடைக்க முடியாதது… உக்ரைன். கட்டு போடும்போது உக்ரேனிய கீதத்தைப் பாடும் சிறுமி” என கூறியுள்ளார். மேலும், அந்த வீடியோவை விக்டர் பஷுலா (Viktor Pashula) என்பவர் படம் பிடித்துள்ளார் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொலை செய்த சிறுவனின் புகைப்பட அடையாளம் வெளியீடு! 

வைரலாகிவரும் இந்த வீடியோவில், சிறுமி ‘ஷ்சே நீ வ்மெர்லா உக்ரைனா’ என்று மழலைக் குரலில் பாடுவதைக் கேட்கலாம், அதாவது “உக்ரைன் இன்னும் அழியவில்லை” என்று பொருள்.

சிறுமியின் காயங்களுக்கான காரணம் தெரியவில்லை. மருத்துவமனை படுக்கையில் செவிலியர்கள் தன் காலில் கட்டு போட்டுக் கொண்டிருக்கும் போது, ​​அவர்களுடன் சேர்ந்து பாடிக்கொண்டே சிரிக்கிறார்.

வியாழனன்று பதிவிடப்பட்ட இந்த வீடியோ 1.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 12,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும் இது 2,300 முறைக்கு மேல் ரீ-ட்வீட் செய்யப்பட்டுள்ளது. 

காலில் கட்டு போடும்போது வலியை மறந்து தேசிய கீதம் பாடிய உக்ரைனிய சிறுமி! மனதை உருக்கும் வீடியோ | Girl Sings Ukraine National Anthem While Bandaged

இதையும் படிங்க: இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு: 4 ஆண்டுகளுக்குள் நடக்கவுள்ள 5-வது தேர்தல்! 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.