மூதாட்டியை கொன்று நகைகளை திருடிய துணை உதவி ஆய்வாளர் மகன்… மது குடிக்க பணம் இல்லாததால் நடத்தப்பட்ட வெறிச்செயல்

புதுச்சேரியில், மதுகுடிக்க பணம் இல்லாததால் மூதாட்டியை கழுத்தை நெறித்துக் கொலை செய்து வீட்டிலிருந்த 20 சவரன் நகைகளை கொள்ளையடித்த துணை உதவி ஆய்வாளரின் மகன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு பகுதியில் தனியாக வசித்து வந்த உண்ணாமலை என்ற 75 வயதான மூதாட்டி கடந்த 23ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கொலை நடந்த நாளில் சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் சென்ற ஸ்டீபென் என்பவனையும் துணை உதவி ஆய்வாளர் மகன் பவித்திரன் என்பவனையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, இருவரும் மது அருந்த பணம் இல்லாததால், வழிப்பறி செய்து வந்ததோடு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடியதாக ஒப்புக் கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.