#BREAKING ||  இன்னும் சற்று நேரத்தில் தமிழக ஆளுநரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்.! 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமை செயலத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்னும் சற்று நேரத்தில் தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படும் நடவடிக்கையைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் உருப்படியாக இன்று முதல் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து  இன்னும் சற்று நேரத்தில் தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.