வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையரொருவர் கைது


டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையரொருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கப்பாளங்களுடன் டுபாயில் இருந்து வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையரொருவர் கைது | Srilankan Was Arrested Arrival Katunayake Airport

இன்று காலை டுபாயிலிருந்து விமானம் மூலம் நாட்டை வந்த குறித்த நபரிடமிருந்து 16 தங்கப் பாளங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றின் பெறுமதி 4 கோடியே 72 இலட்சத்து 11 ஆயிரம் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு – தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 35 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.