சூரியனில் இருந்து விலகுது பூமி: அடிக்குது குளிரு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : சூரியனில் இருந்து பூமி உச்சப்பட்ச துாரத்தை அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்கும்.

சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன. சூரியனை சுற்றியுள்ள பூமியின் சுற்று வட்ட பாதை ஒரு சரியான வட்டமானதால் 0.0167 நீள்வட்ட அளவுடன் சிறிது ஓவல் வடிவத்தில் இருக்கும். பூமி ஒரு ஆண்டில் சூரியனில் இருந்து அதன் தொலை துார நிலைக்கு செல்லும். இது அல்பெலியன் என்றும், பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பது பெரிஹேலியன் என்றும் அழைக்கப்படும்.

அல்பெலியன் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6-, பெரிஹேலியன் ஜனவரி 2- துவங்கும். பூமியில் இருந்து சூரியனுக்கான சராசரி தூரம் 150 மில்லியன் கிலோ மீட்டர். அல்பெலியன் நிலையில் இருக்கும் போது 152 மில்லியன் கிலோ மீட்டர். பின் அது பெரிஹெலியன் நிலையில் இருக்கும் போது பூமியில் இருந்து சூரியனுக்கான தூரம் 147 மில்லியன் கிலோ மீட்டர். அல்பெலியன் மற்றும் பெரிஹெலியன் இடையே உள்ள வேறுபாடு 5 மில்லியன் கிலோ மீட்டர். பூமி, அல்பெரியன் நிலையில் இருக்கும் போது வழக்கத்தை விட குளிர் அதிகம் இருக்கும்.

latest tamil news

இந்தாண்டு சூரியனில் இருந்து பூமி மிக தொலை தூர புள்ளியான அல்பெலியன் நிலையை இன்று(ஜூலை 4-) அடைகிறது. இது ஆக.,22- முடியும். அல்பெலியன் நிகழ்வு இன்று அதிகாலை 5:27 மணிக்கு தொடங்கும். அதன்படி இன்று முதல் பூமி, சூரியனில் இருந்து 15 கோடியே 20 லட்சத்து, 98 ஆயிரத்து 455 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரம் 9 கோடி கிலோ மீட்டர் ஆகும். அல்பெலியன் நிகழ்வு காலத்தில் 15.20 கோடி கி.மீ. தூரம் அதிகரிக்கும். சுமார் 66 சதவீதம் தூரத்தின் அளவு அதிகரிக்கும்.

சூரியனில் இருந்து பூமி உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்கும். அல்பெலியன் காலத்தில் உடல்வலி, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுப் பொருட்களுடன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது என நிபுணர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.