திருச்சி நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் ரெய்டு – கணக்கில் வராத ரூ.31 லட்சம் சிக்கியது..!

திருச்சி நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 31 லட்ச ரூபாய் சிக்கியது.

நீதிமன்றம் அருகே இயங்கி வரும் நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் ஒப்பந்தக்காரர்களை கட்டாயப்படுத்தி லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்தன.

அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்ட போது கணக்கில் வராத 31 லட்ச ரூபாய் சிக்கியது. செயற்பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியாளர் மணி மோகன் ஆகியோரின் வீடுகளில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.