CoVarScan: கொரோனாவின் அனைத்து பிறழ்வுகளையும் கண்டறியும் புதிய சோதனை

கொரோனா வைரஸின் (COVID-19) தற்போதைய அனைத்து வகைகளையும் விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிய அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய சோதனையை உருவாக்கியுள்ளனர். இந்த சோதனைக்கு  CoVarScan என்று பெயரிடப்பட்டுள்ளது.

 கொரோனா வைரஸில் உள்ள எட்டு ஹாட்ஸ்பாட்களின் அடிப்படையை கண்டறிவதன் மூலம், SARS-CoV-2 இன் தற்போது இருக்கும் கொரோனாவின் அனைத்து வகைகளையும் சில மணிநேரங்களில் கண்டறிய முடியும்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் (UT) தென்மேற்கு மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் 4,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதித்து, இந்த சோதனை தொடர்பான கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர்.

CoVarScan சோதனை முடிவுகள் சமீபத்தில் மருத்துவ வேதியியல் இதழில் வெளியிடப்பட்டன. கண்டுபிடிப்புகளின்படி, கோவிட் நோயைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் மற்ற முறைகளைப் போலவே சோதனையும் துல்லியமானது. SARS-CoV-2 இன் தற்போதைய அனைத்து மாறுபாடுகளையும் சோதனை வெற்றிகரமாக வேறுபடுத்துகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு

இந்த ஆய்வின் மூத்த ஆசிரியரான Jeffrey SoRelle இந்த புதிய சோதனையைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “இந்தச் சோதனையைப் பயன்படுத்தி, சமூகத்தில் தற்போது எந்தவிதமான கொரோனா வைரஸின் பிறழ்வுகள் உள்ளன என்பதையும், ஒரு புதிய பிறழ்வு உருவாகிறதா என்பதையும் மிக விரைவாக கண்டறிய முடியும்”.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு நோயாளிக்கு COVID-19 இன் எந்த மாறுபாடு உள்ளது என்பதைத் தீர்மானிக்க விஞ்ஞானிகள் மரபணு வரிசைமுறையைப் பயன்படுத்துகின்றனர். இந்த செயல்முறை நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்கிறது மற்றும் விலை உயர்ந்தது. வைரஸ்களில் உள்ள ஆர்என்ஏ வரிசையை பகுப்பாய்வு செய்ய, சோதனைகள் அதிநவீன கருவிகளையும் நம்பியுள்ளன.

எனவே இந்த புதிய சோதனை, கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க | வந்துவிட்டதா நான்காவது அலை; வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்

CoVarScan எப்படி வேலை செய்கிறது?

ஆராய்ச்சியின் போது, ​​CoVarScan 96 சதவீத உணர்திறன் மற்றும் முழு மரபணு வரிசைமுறையுடன் ஒப்பிடும்போது 99 சதவீத தனித்தன்மையையும் கொண்டிருந்தது.

CoVarScan சோதனையானது, SARS-CoV-2 இன் எட்டு பகுதிகளைக் கண்டறிவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர், அவை பொதுவாக வைரஸ் வகைகளுக்கு இடையில் வேறுபடுகின்றன. வைரஸ் உருவாகும்போது வளரும் மற்றும் சுருங்கும் மீண்டும் மீண்டும் வரும் மரபணு பகுதிகளின் நீளத்தை அளவிட சிறிய பிறழ்வுகளை இது கண்டறிகிறது.

ஆர்வமுள்ள இந்த எட்டு தளங்களில் ஆர்என்ஏவை நகலெடுத்து அளவிடுவதற்கு பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (பிசிஆர்) முறையை இந்த முறை நம்பியுள்ளது.

மேலும் படிக்க | COVID-19: வந்துவிட்டதா நான்காவது அலை? ஒரே நாளில் புதிதாக 7,584 பேர் பாதிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.