அடுக்கடுக்கான கேள்விகள்., திணறிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பு… அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிபதி.!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று இரண்டாவது நாளாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, பொதுக்குழு நடத்த உச்ச நீதிமன்றமே அனுமதித்துள்ள நிலையில், நாங்கள் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று நீதிபதி கேள்வி ஏழுப்பினார்.

ஓபிஎஸ் தரப்பு : கட்சி சட்டவிதிமுறைகள்படி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு : பொதுக்குழுவுக்கு தடை கோரிய அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அதே கோரிக்கையை  தற்போது வைக்க முடியாது” என்ற ஒரு வாதத்தை முன் வைத்துள்ளனர்.

மேலும், “13 நாட்களுக்குப் பின்பு தான் பொதுக்குழுவுக்கு தடை கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், குறித்த காலத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று கருத வேண்டும் என்றும், கூட்டம் நடத்தும் உரிமையை பறிக்கக்கூடாது. வழக்கில் பதில் அளிக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் செய்தது.

ஓபிஎஸ் தரப்பு : சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தாலும், விதிகளை மீற வாய்ப்புள்ளது என்று வாதிட்டது.

நீதிபதி : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அங்குதான் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

நீதிபதி : மற்ற விவகாரங்கள் என எதை குறிப்பிட முடியும்? என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கேள்வி எழுப்பினர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு : கூட்டத்திற்கு பாதுகாப்பு கோருவது உள்ளிட்ட விஷயங்கள்தான் என்று பதிலளித்தனர்.

தொடர்ந்து நீதிபதி, 

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?
பதில்மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு
பொதுக்குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?
எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்?
பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என்று பல கேள்விகளை எழுப்பி விரிவான பதில்மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

மேலும், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் மனு மீதான விசாரணையை நாளை மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைத்ததும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.