நீலகிரி.! இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை.!

நீலகிரியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அத்தியூர்மட்டம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் கார்த்திக்(23). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் உள்ள அனைவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர். 

இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த கார்த்திக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலை முடிந்த பிறகு இரவு வீட்டிற்கு வந்த தந்தை வீட்டின் அறையில் கார்த்திக் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த போலீசார் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.