நேற்று பதவியை தூக்கி எறிந்த கேரள அமைச்சர் சஜி செரியன் இன்று கைது! கேரளாவில் பரபரப்பு…

திருவனந்தபுரம்: அமைச்சர் பதவியை நேற்று தூக்கி எறிந்த சஜி செரியன் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா அமைச்சரவையில் கலாச்சார விவகாரங்கள் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தவர் சஜி செரியன். இவர் சமீபத்தில் அரசியல் சாசனத்துக்கு எதிராக சர்ச்சைக் குரிய கருத்துக்களை பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வந்தது.

இந்த நிலையில், அவர் நேற்று தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகராஜினாமா கடிதத்தை முதல்வர் பினராய் விஜயனிடம் அளித்தார்.

இந்த நிலையில், அவர் மீது தேசிய மரியாதை அவமதிப்பு சட்டத்தின் கீழ் கேரள காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து  இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர்மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இந்த விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.