எலி மருந்து தின்று இளம்பெண் தற்கொலை| Dinamalar

மைசூரு : பெற்றோரை பார்க்க விடாததுடன், வரதட்சணை கேட்டு கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்தியதால், எலி மருந்து தின்று இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.மைசூரு, எச்.டி.கோட்டேவின், மச்சூரு கிராமத்தை சேர்ந்த தம்பதி ஆனந்த், 28, – ஜோதி, 22. நான்கு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது.

ஆனந்தும், அவரது குடும்பத்தினரும், பணத்தாசையால், ஜோதியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர்.பணம் கொண்டு வராவிட்டால், பிறந்த வீட்டுக்கு செல்லவோ, பார்க்கவோ அனுமதிக்க மாட்டோம் என, மிரட்டினர்.மகளை காண வந்த ஜோதியின் பெற்றோரையும் வாய்க்கு வந்தபடி பேசி அவமதித்தனர். மகளை பார்க்கவும் விடவில்லை.கணவர் வீட்டினரின் செயலால் விரக்தியடைந்த ஜோதி, நேற்று முன்தினம் எலி மருந்து தின்று, தற்கொலைக்கு முயற்சித்தார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று உயிரிழந்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.