சர்வதேச அவசரநிலையாக அறிவிக்கப்பட்ட குரங்கு அம்மை நோய் – உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?

உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக அறிவித்துள்ளது. சமீப காலத்தில் அதிகம் பரவி வரும் தொற்று நோயாக குரங்கு அம்மை நோய் பார்க்கப்படுகிறது.ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் முதன்முறையாக குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. தற்போது பல்வேறு நாடுகளுக்கு அது பரவியுள்ளது. உலகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குரங்கு அம்மை நோயை சர்வதேச நெருக்கடி ஆக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

” உலகத்தில் சுமார் 75 நாடுகளை சேர்ந்த 16 ஆயிரம் பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் இதுவரை பலியாகியுள்ளனர். பல்வேறு நாடுகளுக்கும் இது பரவி வருகிறது. இதனால் இதை சர்வதேச அவசரநிலை ஆக அறிவித்துள்ளோம்” என்று கூறினார்.

கொரோனா தொற்றிற்கு பிறகு இப்போது குரங்கு அம்மை நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.