இலங்கைக்கு உதவக் கூடாது லோக் ஜனசக்தி வலியுறுத்தல்| Dinamalar

கோவை: ”இலங்கைக்கு மத்திய, மாநில அரசுகள் உத வக்கூடாது,” என, ராஷ்டிரிய லோக்ஜனசக்தி கட்சி தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன் கூறினார்.

லோக்ஜனசக்தி கட்சி தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன் கோவையில் நிருபர்களிடம் கூறுகையில்,”ஆன்லைன்’ ரம்மியால் இளைஞர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்வது அதிரித்துள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் தமிழக நடிகர்கள் நடிப்பதை நிறுத்த வேண்டும்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட, 18 மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை தொடர்ந்து துன்புறுத்தும் இலங்கைக்கு மத்திய அரசும், தமிழக அரசும் இனி எந்த உதவியும் செய்யக்கூடாது,” என்றார்.மாநில பொது செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.