திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சரளா என்ற மாணவி 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இதனை அடுத்து, காலை உணவு சாப்பிட சென்ற அவர் திரும்பி அறைக்கு சென்றுள்ளர.
நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த அவரது தோழிகள் அறைக்கு சென்று பார்த்த போது அவர் அறையில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் தற்கொலை செய்தியை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் விடுதியின் முன் குவிந்தனர். இதனால், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.