மெக்சிகோ சிட்டி : மெக்சிகோ உயிரியல் பூங்காவில் ‘செல்பி’ எடுத்த இளம்பெண்ணின் தலைமுடியை குரங்குகள் இழுக்கும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு, இளம்பெண் ஒருவர் தன் நண்பர்களுடன் நேற்று முன்தினம் வந்தார். அங்குள்ள ஒரு கூண்டில் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த கூண்டு அருகே நின்று பின்னணியில் குரங்குகள் தெரிவது போல அந்தப் பெண் செல்பி எடுத்தார். அப்போது, கூண்டின் இடைவெளி வழியாக அந்த இளம்பெண்ணின் தலைமுடியை ஒரு குரங்கு பிடித்து இழுத்தது.
அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அலறவே, குரங்கு தலைமுடியை விட்டு விட்டது. அங்கிருந்து வெளியே சென்ற போது மற்றொரு குரங்கு, அந்தப் பெண்ணின் முடியை பிடித்து இழுத்து விளையாடியது. அதனுடன் இன்னொரு குரங்கும் சேர்ந்து கொண்டது.அந்தப் பெண் மீண்டும் போராடி இரு குரங்குகளின் பிடியில் இருந்து தப்பினார்.
அந்தப் பெண்ணுடன் வந்த நண்பர், குரங்குகளின் இந்த விளையாட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement