தென்காசி: குற்றால அருவிகளில் அதிகளவில் தண்ணீர் வருவதால் பழைய அருவி, பிரதான அருவி மற்றும் ஐந்து அருவிகளில் நாளை 28.07.2022 குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை அமாவாசையை கொண்டாட பொதுமக்கள் குற்றாலம் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.