‘டெண்டரில் நான் சொல்றதைத்தான் செய்யணும்’: அதிகாரிக்கு தி.மு.க பிரமுகர் மிரட்டல் ஆடியோ

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் திமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தமிழ்ச்செல்வன் டெண்டரில் நான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்ச்செல்வன், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயவேல் உடன் போனில் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி நிர்வாகங்களில் தொடர்ந்து தலையீடு செய்து செய்து அதிகாரிகளை மிரட்டி வருவதாக அதிமுக விமர்சனங்களை வைத்து வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ-வும் திமுக ஒன்றிய செயலாளருமான தமிழ்ச்செல்வன், அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிம் டெண்டரில் நான் சொல்வதைத் தான் செய்ய வேண்டும் என்று போனில் மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில், தமிழ்ச்செல்வன், போன் பண்ணா நீ எடுக்க மாட்டியா? நான் எக்ஸ் (முன்னாள்) எம்.எல்.ஏ பேசுறேன்… என்று கூறுகிறார். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்: ஆம் சொல்லுங்க… என்று கூறுகிறார்.

தமிழ்ச்செல்வன் தொடர்ந்து போன் பண்ணா எடுக்க மாட்டியா நீ? என்று கேட்கிறார். அதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர், “இல்லைங்க… பேசிக்னு இருந்தங்க… கலெக்டர் ஆஃபிஸ்ல இருந்து போன் வந்தது.. பேசிக்னு இருந்தன்.” என்று பதில் கூறுகிறார்.

தமிழ்ச்செல்வன், “கரெக்ட்டா வச்சிட்டிங்களா? அது டெமாலிஷ் பண்ணனுமா… செல்லம் என்று கேட்கிறார்.?” என்று கேட்கிறார்.

அதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர், “வைக்கல வைக்கல… இன்னும் அதை வைக்கல சார்” என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசும் தமிழ்ச்செல்வன், “வைக்கக் கூடாது… நான் சொல்றதைதான் செய்யணும். எம்.எல்.ஏ பேசுறேன். நான் எக்ஸ் எம்.எல்.ஏ மட்டுமல்ல, நான் ஒன்றியச் செயலாளர். சேர்மன் விமலாதான் கவுன்சிலர் இல்லை. …. என் பேச்சைதான் கேட்கணும். அன்புமணிக்கு எல்லாம் டெண்டர் கொடுக்கக் கூடாது நீ… திங்கள்கிழமை அங்க அடிதடி நடிக்கும். எழுதி வச்சுக்க” என்று மிரட்டல் விடுக்கிறார்.

இந்த ஆடியோவைக் குறிப்பிட்டு, அதிமுக சட்ட ஆலோசகர் குழு உறுப்பினர் ஆர்.எம். பாபு முருகவேல் கூறுகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “அது திமுகவினராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை இருக்கும் என்று கூறிய மு.க. ஸ்டாலின், இவர் மீது நடவடிக்கை இருக்குமா முதல்வரே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.