தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு! உயர்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: உயர்கல்வி நிலையங்களில் பணியாற்றி வரும் தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் 4,681 பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்யப்படுகிறது என உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில்,  அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றும் பேராசிரியர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊதியம் மற்றும் பிற பணிகள் வழங்க ஏதுவாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொடர் பணி நீட்டிப்பு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலமாக பணியாற்றி வரும் 4681 பேராசிரியர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு செய்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.