லாரியில் இருந்து குதித்த ஒட்டுநர், உடல் நசுங்கி பரிதாப பலி..!

லாரியில் இருந்து குதித்த ஒட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை – தென்காசி முதல் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றனர். எனவே வாகனங்களை வேறு பாதையில் திருப்பிவிட தற்காலிகமாக குளத்தின் உள்ளே பாதை அமைக்கப்பட்டது. இந்த பணிகளில் இசக்கி என்பவர் லாரி ஒட்டுநரகாக வேலை செய்து வருகிறார்.சம்பவதன்று அவர் ஓட்டிவந்த லாரி மின்கம்பி அறுந்து விழுந்தது.

இதனால், பதறி போன அவர் லாரியில் இருந்து குதித்துள்ளார். அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் அவர் மேலே ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.