ஆடம்பர பொருள் இறக்குமதிதடையை நீக்கியது பாகிஸ்தான்| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ஆடம்பர பொருள் இறக்குமதிக்கு விதித்து இருந்த தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த ஏப்ரலில் அந்நாட்டு பிரதமராக பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் கடந்த மே மாதம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு பின், அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இதில் 860 பொருட்கள் இடம்பெற்று இருந்தன.இந்நிலையில், பாகிஸ்தான் நிதியமைச்சர் மிப்தாப் இஸ்மாயில் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆடம்பர பொருட்கள் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்க முடிவு செய்யப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.