இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ஆடம்பர பொருள் இறக்குமதிக்கு விதித்து இருந்த தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த ஏப்ரலில் அந்நாட்டு பிரதமராக பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் கடந்த மே மாதம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு பின், அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இதில் 860 பொருட்கள் இடம்பெற்று இருந்தன.இந்நிலையில், பாகிஸ்தான் நிதியமைச்சர் மிப்தாப் இஸ்மாயில் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆடம்பர பொருட்கள் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்க முடிவு செய்யப்பட்டது.
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ஆடம்பர பொருள் இறக்குமதிக்கு விதித்து இருந்த தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்