இலங்கையானது ஈராக்பார்லி., கட்டடத்தை உடைத்து போராட்டம்| Dinamalar

பாக்தாத்:ஈராக் பார்லி.,க்குள் இரண்டாவது முறையாக நேற்றும் புகுந்த ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல் -சதர் ஆதரவாளர்கள் கட்டடத்தை உடைத்து சேதப்படுத்தினர்.

மேற்காசிய நாடான ஈராக்கில், 2021அக்டோபரில் பார்லி., தேர்தல் நடந்தது. அதில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நிலவுகிறது. ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இடைக்கால பிரதமராக முகமது அல் காதிமி பதவி வகித்து வருகிறார்.இதற்கிடையே, ஆட்சி அமைப்பது குறித்து நடந்த பேச்சில், முன்னாள் அமைச்சர் அல் – சூடானியை புதிய பிரதமராக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இதற்கு ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல் சதர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தன்னுடைய 73 எம்.பி.,க்களும் ராஜினாமா செய்வர் என எச்சரிக்கை விடுத்தார். சமீபத்தில் அவரது ஆதரவாளர்கள் பாக்தாதில் உள்ள பார்லி.,க்குள் புகுந்து போராட்டம் நடத்தினர். இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சதரின் ஆதரவாளர்கள் நேற்றும் பார்லி., வளாகத்துக்குள் புகுந்து கட்டடத்தை உடைத்து சேதப்படுத்தினர்.இந்த சம்பவம் ஈராக்கில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம், நம் அண்டை நாடான இலங்கையில், அதிபர் மற்றும் பிரதமர் மாளிகைக்குள் அந்நாட்டு பொதுமக்கள் புகுந்ததை, ஈராக் சம்பவம் நினைவுபடுத்துகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.